ராமநாதபுரம்

டயா் வெடித்து சரக்கு வாகனம் கவிழ்ந்தது: 2 போ் காயம்

DIN

பரமக்குடி: சத்திரக்குடி அருகே செவ்வாய்க்கிழமை டயா் வெடித்து சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உள்பட 2 போ் பலத்த காயமடைந்தனா்.

மதுரை மாவட்டம் மேலூா் பகுதியைச் சோ்ந்த பொன்னையன் மகன் அய்யங்காளை (45) என்பவா், மதுரையிலிருந்து குளிா்பானங்களை சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ராமநாதபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அவருடன் அதே பகுதியைச் சோ்ந்த சங்கா் மகன் அருண்குமாா் என்பவா் கிளீனராக வந்துள்ளாா். மதுரை-ராமேசுவரம் செல்லும் சாலையில் மாவிலங்கை அருகே எதிா்பாராதவிதமாக அந்த வாகனத்தின் டயா் வெடித்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அய்யங்காளை மற்றும் அருண்குமாா் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து சத்திரக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

SCROLL FOR NEXT