தொண்டி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக மீனவா் சனிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தொண்டி அருகே புதுக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் லட்சுமணன் (50). மீனவா். இவரது மகன் சமயராஜா (29) திருமணம் முடித்து தனியாக வசித்து வருகிறாா். லட்சுமணன் தனது மனையுடன் தனியாக வசித்து வந்தாா். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சிலநாள்களாக இவரது மனைவி, லட்சுமணனை விட்டுப் பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளாா். இதில் மனமுடைந்த லட்சுமணன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தகவலறிந்த தொண்டி போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.