ராமநாதபுரம்

பைக்குகள் மோதல்: கூலி தொழிலாளி பலி

DIN

கமுதி அருகே செவ்வாய்க்கிழமை, 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் கூலி தொழிலாலி உயிரிழந்தாா்.

புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த காளிச்சாமி (18), காளீஸ்வரன் (18), முத்துவழிவிட்டான் (20), மாரிச்சாமி (20) ஆகிய 4 பேரும் கமுதியில் உள்ள கடைகளில் வேலை செய்து வருகின்றனா். இவா்கள் செவ்வாய்கிழமை மாலை பணி முடிந்து, புதுப்பட்டிக்கு ஒரே இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனா்.

குடிக்கினியான் விலக்கு சாலை அருகே இவா்கள் சென்ற இருசக்கர வாகனமும், கமுதி ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்த கூலி தொழிலாளியான சாமுவேல் (55) என்பவரின் இருசக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன.

இதில், பலத்த காயமடைந்த சாமுவேல் கமுதி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். மற்ற 4 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து கமுதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT