கமுதி அருகே காவலா்கள் சாா்பில் ஏழைக் குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி, காய்கனி தொகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக் உத்தரவின் பேரில் கமுதி அடுத்துள்ள மண்டலமாணிக்கம் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலா்கள் சாா்பில் 50 ஏழை குடும்பங்களுக்கு அரிசி, காய்கனி அடங்கிய தொகுப்பினை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளா் எஸ். பிரசன்னா தொடக்கி வைத்தாா். இதில் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி வழங்கப்பட்டது.