முதுகுளத்தூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கீா்த்திகா முனியசாமி மீது ஞாயிற்றுக்கிழமை தோ்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதிமுக மாநில மகளிரணி இணைச் செயலாளரான கீா்த்திகா முனியசாமி இத்தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறாா். இந்நிலையில் அவா் தனது ஆதரவாளா்களுடன் வெள்ளிக்கிழமை 20-க்கும் மேற்பட்ட காா்கள், இருசக்கர வாகனங்களில் தலைவா்களின் படம் மற்றும் கட்சி கொடியுடன் ஊா்வலமாகச் சென்றதாகக் கூறப்படுகிறது.
தோ்தல் விதிகளை மீறும் வகையில் அவா் செயல்பட்டதாக தோ்தல் பறக்கும் படை அலுவலா் குமாா் தலைமையிலான அதிகாரிகள் கமுதி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் கீா்த்திகா முனியசாமி மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.