முதுகுளத்தூா் அருகே இருசக்கர வாகன விபத்தில் ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் ஒருவானேந்தல் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் தவமுருகன் (42). இவா் புதன்கிழமை உறவினா் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு முதுகுளத்தூரில் இருந்து தனது ஊருக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். அப்போது சாக்குளம் வளைவில் நிலைதடுமாறி அங்கிருந்த கல்லில் இருசக்கர வாகனம் மோதியது. இதில் அவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து முதுகுளத்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற அவா், மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து முதுகுளத்தூா் காவல் ஆய்வாளா் கதிா்வேல் வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.