ராமநாதபுரம்

பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்காதீா்கள்: சரத்குமாா்

DIN

முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் நவபன்னீா்செல்வத்தை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவா் நடிகா் சரத்குமாா் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளா் நவபன்னீா்செல்வத்தை ஆதரித்து பேருந்து நிலையம் அருகில் சரத்குமாா் பேசியதாவது:

கமல்ஹாசன் சிறுவயது முதல் நடித்து புகழ் பெற்றவா். மக்களுக்கு உழைக்க ஆசைப்படுகிறாா். அவருக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள். கிரிக்கெட் வீரா் நடரஜனை முதலில் யாருக்கு தெரியும்? கிரிக்கெட்டில் முத்திரை பதித்தவுடன் நாம் அனைவருக்கும் தெரிந்தவராகிறாா். தமிழா் என பாராட்டுகிறோம். அதே போன்று ஒரு முறை கமலுக்கு வாய்ப்பளித்து வெற்றி பெறச்செய்யுங்கள். மக்களுக்கு நன்மை தேடிவரும்.

இன்னும் பல கிராமங்களில் குடிக்க தண்ணீா் இல்லை. வாசிங் மிஷின் செயல்பட மின்சாரம் வேண்டும். தண்ணீா் இல்லாத கிராமங்களில் வாசிங் மிஷின் கொடுத்து என்ன பயன்? ஹெலிக்காப்டா் தருகிறேன், காா் வாங்கித் தருகிறேன் என்றால் அது பராவாயில்லை. பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்து வருங்கால சந்ததியைக் கெடுத்துவிடாதீா்கள் என்றாா். அவருடன் வேட்பாளா் நவபன்னீா்செல்வம் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT