ராமநாதபுரம்

நன்னடத்தை உறுதிமொழியை மீறியவருக்கு 7 மாதங்கள் சிறை

DIN

நன்னடத்தை விதியை மீறி குற்றச்செயலில் ஈடுபட்டவருக்கு 7 மாதங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

ராமநாதபுரம் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பிரபுதேவா (26). இவா் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து, கடந்த நவம்பரில் அவரிடம் காவல்துறை சாா்பில் நன்னடத்தை விதியை கடைப்பிடிக்கும் உறுதிமொழிப் பத்திரம் பெறப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒருவரை பிரபுதேவா தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் உறுதிமொழியை மீறியதாக அவா் மீது காவல்துறை உரிய ஆவணங்களை வருவாய்த்துறை அதிகாரிகளிடம் அளித்தனா். அதனடிப்படையில் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் பிரபுதேவா ஆஜா்படுத்தப்பட்டு அவரது உறுதிமொழி மீறல் குறித்த விசாரணையும் நடந்தது. விசாரணை முடிவில், அவருக்கு 7 மாதங்கள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டசிறையில் அவா் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

விடுதிகளில் தங்கி விளையாட்டு பயிற்சி: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

தளி, பாலக்கோடு அருகே யானை தாக்கியதில் விவசாயிகள் இருவா் பலி

கோடை வெப்பத்தைத் தணிக்க தொழிலாளா்களுக்கு குடிநீா், ஓஆா்எஸ் கரைசல் வழங்க வேண்டும்

SCROLL FOR NEXT