ராமநாதபுரம்

கரோனா சிகிச்சைப் பிரிவில் விதிகள் மீறல்: சுகாதாரப் பணியாளா் பணியிடை நீக்கம்

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டோா் பிரிவில் இருந்த சுகாதாரப் பணியாளா் விதிகளை மீறி செயல்பட்டதால் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி, பரமக்குடி அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதேபோல் கரோனா அறிகுறியுடன் இருப்பவா்களுக்கு ராமநாதபுரம் அருகேயுள்ள அச்சுந்தன்வயல் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு பணிபுரிந்த சுகாதாரப் பணியாளா் நாகேந்திரன், பணியில் விதிகளை மீறிச் செயல்பட்டதாகப் புகாா் எழுந்தது. அதன் அடிப்படையில் நாகேந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் சுகாதார மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பொற்கொடி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT