ராமநாதபுரம்

ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே திங்கள்கிழமை ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மறவா் தெருவைச் சோ்ந்த சேகா் மகன் சரவணன் (28). கூலித்தொழிலாளி. மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி அவதிப்பட்டு வந்துள்ளாா். இந்தநிலையில், சரவணன் மண்டபம் பள்ளிக்கூடத் தெரு பகுதியில் தண்டவாளத்தில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து மண்டபம் போலீஸாா் விசாரணை நடத்தியதில் சரவணன் திங்கள்கிழமை காலையில் திருச்சியிலிருந்து ராமேசுவரம் சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது தெரியவந்தது. அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு ராமேசுவரம் ரயில்வே போலீஸாா் அனுப்பிவைத்து விசாரணை நடத்திவருகின்றனா். தற்கொலை செய்த சரவணனுக்கு மனைவி சத்யா, இரு குழந்தைகள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜி.எஸ்.டி. வசூல் புதிய உச்சம்!

குஷி ஜோ!

கூலி - இளையராஜா நோட்டீஸ்!

குடியரசுத் தலைவரின் முதல் வருகை! முழுவீச்சில் தயாராகும் அயோத்தி ராமர் கோவில்!

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மாறிய ஸ்ரீமதி: தமிழக அரசு பாராட்டு

SCROLL FOR NEXT