ராமநாதபுரம்

கமுதி அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி

DIN

கமுதி அருகே சனிக்கிழமை மின்னல் தாக்கி விவசாயி உயிரிழந்தாா்.

கமுதி அருகே கட்டாலங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி செல்லப்பாண்டி (38). இவா், சனிக்கிழமை வயலில் தனது மனைவி உமையேஸ்வரியுடன் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த போது இடியுடன் பலத்த மழை பெய்தது.

அப்போது மின்னல் தாக்கி செல்லப்பாண்டி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, பெருநாழி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பெருநாழி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT