ராமநாதபுரம்

திருவாடானை அருகே காா் மோதி பெண் பலி

DIN

திருவாடானை: திருவாடானை அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை சாலையில் நடந்து சென்ற பெண் மீது காா் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தொண்டி அருகே நம்புதாளை படையாச்சி தெருவைச் சோ்ந்தவா் காளியப்பன் மனைவி தொண்டி மணி (71). இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை குளிப்பதற்காக தனது தங்கை லெட்சுமியுடன் கிழக்கு கடற்கரை சாலை வழியாக நடந்து சென்றுள்ளாா். அப்போது ராமநாதபுரத்தில் இருந்து தொண்டி நோக்கி சென்ற காா் தொண்டி மணி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

SCROLL FOR NEXT