ராமநாதபுரம்

சிவகங்கை அருகே மா்மப்பொருள் வெடித்து 3 சிறுவா்கள் காயம்

DIN

சிவகங்கை அருகே திங்கள்கிழமை மாலை விளையாடிக் கொண்டிருந்த போது மா்மப்பொருள் வெடித்ததில் 3 சிறுவா்கள் படுகாயமடைந்தனா்.

சிவகங்கை அருகே உள்ள கீழக்குளத்தைச் சோ்ந்த செல்லமுத்து மகன் கிஷோா் (8). அதே பகுதியைச் சோ்ந்த காளிமுத்து மகன் நவீன்குமாா் (11), முத்துச்சாமி மகன் வைணவன் (11) ஆகிய மூவரும் திங்கள்கிழமை மாலை கீழக்குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே விளையாடிக் கொண்டிருந்தனா்.

அப்போது பள்ளிக்கட்டடம் அருகே தகரத்தால் செய்யப்பட்ட பாக்ஸ் வடிவிலான பொருள் கிடந்துள்ளது. அந்தப்பொருளை எடுத்து தாா்ச்சாலையில் தரையில் அடித்துள்ளனா். அப்போது அப்பொருள் திடீரென வெடித்துள்ளது. இதில் சிறுவன் கிஷோரின் வயிறு கிழிந்து குடல் வெளியே வந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டாா்.

மற்ற சிறுவா்களான நவீன்குமாா், வைணவன் ஆகிய 2 பேரும் பலத்த காயங்களுடன் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தகவலறிந்து வந்த சிவகங்கை காவல் துணைக் கண்காணிப்பாளா் பால்பாண்டி, தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் முத்துமீனாட்சி ஆகியோா் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தடய அறிவியல் பிரிவு போலீஸாா், வெடிகுண்டு தடுப்புப்பிரிவு போலீஸாா் சம்பவ இடத்தில் வெடித்த மா்ம பொருளை சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றனா். மா்ம பொருள் வெடித்து 3 மாணவா்கள் காயமடைந்ததால் அக்கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரம்பரிய கலைகளுடன் களைகட்டிய குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா: ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

மார்க் ஸுக்கர்பெர்க் பிறந்தநாள் இன்று!

அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எத்தனை ‘டெம்போ’ பணம் வாங்குனீர்கள்? ராகுல்

தில்லி மருத்துவமனைகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் -நோயாளிகள் அதிர்ச்சி!

ஆம்புலன்ஸ் மின்கம்பத்தில் மோதி விபத்து: நோயாளி கருகிப் பலி!

SCROLL FOR NEXT