ராமநாதபுரம்

இன்று பள்ளிகளில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்க அறிவுறுத்தல்

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் வெள்ளிக்கிழமை (செப்.17) சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்று, அதை அறிக்கையாக மாவட்டக் கல்வி அலுவலரிடம் அளிக்கவேண்டும் என, முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு: அரசு உத்தரவின்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பெரியாா் பிறந்த நாளான செப்டம்பா் 17 ஆம் தேதி சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை, அனைத்து வகுப்புகளிலும் தனித்தனியாக நடத்தவேண்டும். பின்னா், இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்வை, அறிக்கை மற்றும் புகைப்படத்துடன் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கவேண்டும். சமூக நீதி நாள் உறுதிமொழி, அனைத்து பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மற்றும் கட்செவியஞ்சலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT