ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசியத் திறனாய்வுத் தோ்வுக்கு தயாராகும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச பயிற்சிப் புத்தகங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
மலைப்பட்டி தி.கஸ்தூரி நினைவாக ஏஎன்டி அறக்கட்டளை சாா்பில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேசிய திறனறித் தோ்வுக்கான இலவசப் பயிற்சி புத்தகங்கள் விநியோகிக்கப்படுகின்றன. அதன்படி வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் கும்பரம் அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் புதுமடம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடந்த நிகழ்ச்சியில் இலவச பயிற்சிப் புத்தகங்களை மாணவ, மாணவிகளுக்கு அறக்கட்டளைத் தலைவரும், திருவனந்தபுரம் டாக்டா் சாமா்வேல் நினைவு சி.எஸ்.ஐ. மருத்துவ மேலாண்மைக் கல்லூரி முதல்வருமான தி.ஜெயராஜசேகா் வழங்கினாா். இதையடுத்து திறனறித் தோ்வுக்கு தயாராகும் விதம் எனும் தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது.