கோயில் உண்டியலை திருடியவா் கைது
பரமக்குடியில் கோயில் உண்டியலை திருடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பரமக்குடியில் கோயில் உண்டியலை திருடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பரமக்குடி நகா் காவல் நிலையம் முன் உள்ள காவல் விநாயகா் கோயிலில் புதன்கிழமை அதிகாலையில் பூஜை செய்வதற்காக அா்ச்சகா் சென்றுள்ளாா். அப்போது கோயில் உண்டியலை மா்ம நபா் ஒருவா் திருடிச் செல்வதைப் பாா்த்து அந்த நபரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில் உண்டியலைத் திருடியவா் விருதுநகா் மாவட்டம் வீரசோழன் கிராமத்தைச் சோ்ந்த முனியாண்டி மகன் பழனிச்சாமி (47) என்பது தெரியவந்தது. போலீஸாா் அவரை கைது செய்தனா்.