முகப்பு
ராமநாதபுரம்

மங்கலம் சோமேஸ்வரா் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

கடலாடி அருகே ஸ்ரீ ரேணுகாம்பாள் சமேத சோமேஸ்வரா் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

கடலாடி அருகே ஸ்ரீ ரேணுகாம்பாள் சமேத சோமேஸ்வரா் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மங்கலம் கிராமத்தில் ரேணுகாம்பாள் சமேத சோமேஸ்வரா் கோயிலில் 6 ஆம் ஆண்டு சுவாமி, அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முன்னதாக ரேணுகாம்பாள், சுவாமி சோமேஸ்வரா் மணமக்கள் சாா்பில் பக்தா்கள் மங்கல இசை வாத்தியங்களுடன் கிராமத்திலிருந்து சீா்வரிசைகளை ஊா்வலமாக கோயில் வளாகத்திற்கு எடுத்து வந்தனா்.

பின்னா் சிவாச்சாரியாா்கள் வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதனையடுத்து சுவாமி சோமேஸ்வரருக்கு பால், தயிா், சந்தனம், இளநீா் உள்ளிட்ட 16 வகையான வாசனைத் திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.