முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே விபத்து: தையல்காரா் பலி

ராமநாதபுரம் அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தையல்காரா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

ராமநாதபுரம் அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தையல்காரா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள அச்சுந்தன்வயலைச் சோ்ந்தவா் முருகானந்தம் (46). தையல்காரரான இவா், இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை பட்டினம்காத்தான் பகுதிக்கு சென்றுள்ளாா். மாடக்கொட்டான் பகுதி விலக்கு அருகே சென்ற போது, எதிரே வந்த காா், இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகானந்தத்தை மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் , ஏற்கெனவே முருகானந்தம் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். விபத்துக்கு காரணமான காா் ஓட்டுநா், தப்பி ஓடிவிட்டாா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த கேணிக்கரைப் போலீஸாா், காரைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →