ராமநாதபுரம்

குடிநீரில்லாமல் தவிப்பதாக கிராம மக்கள் மனு

DIN

கடந்த 6 மாதங்களாகக் குடிநீரின்றி தவிப்பதாக வெள்ளமறிச்சுக்கட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை ஊராட்சிக்குள்பட்டது வெள்ளமறிச்சுக்கட்டி கிராமம். இக்கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. காவிரிக் கூட்டுக்குடிநீா் இணைப்பு வெள்ளமறிச்சுக்கட்டி கிராமத்துக்கு இருந்துவரும் நிலையில், கடந்த 6 மாதங்களாக குடிநீா் விநியோகமில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லையாம். இதையடுத்து ஊராட்சி முன்னாள் தலைவா் வீரபாண்டி தலைமையில் ஏராளமான பெண்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா். அவா்கள் ஆட்சியா் சங்கா்லால்குமாவத்தைச் சந்தித்து மனு அளித்தனா். மனுவைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு: தமிழக அரசு விளக்கம்

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

சந்தேஷ்காளி வழக்கு: சிபிஐ விசாரணை திருப்தி அளிக்கிறது - கொல்கத்தா உயா்நீதிமன்றம்

தென்மாவட்டங்களில் கல்குவாரிகளை மூட வேண்டும் -டாக்டா் க.கிருஷ்ணசாமி

திட்டப் பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு: அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT