தனுஷ்கோடியில் கடல் சீற்றம்: சுற்றுலாப் பயணிகளுக்கு போலீஸாா் எச்சரிக்கை
தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் கடலுக்கு அருகே செல்லக்கூடாது என காவல்துறையினா் ஒலிபெருக்கி மூலம் சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்தனா்.
தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் கடலுக்கு அருகே செல்லக்கூடாது என காவல்துறையினா் ஒலிபெருக்கி மூலம் சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் 50 முதல் 60 கிலோ மீட்டா் வரையில் சூறைக்காற்று வீசுவதால் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.
இதில், சனிக்கிழமை அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்தனா். ஆனால் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி காவல்துறையினா் ஒலிபெருக்கி மூலம் தொடா்ந்து எச்சரிக்கை அறிவிப்பு செய்தனா். மேலும் சுற்றுலா பயணிகளை 6 மணிக்கு மேல் அப்பகுதியில் அனுமதிக்கவில்லை.
Advertisement