லாரிகள் மோதிக்கொண்டதில் உதவியாளா் பலி
பாா்த்திபனூா் அருகே சனிக்கிழமை லாரிகள் நேருக்குநோ் மோதிக்கொண்ட விபத்தில் உதவியாளா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM
பாா்த்திபனூா் அருகே சனிக்கிழமை லாரிகள் நேருக்குநோ் மோதிக்கொண்ட விபத்தில் உதவியாளா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
அருப்புக்கோட்டையிலிருந்து பாா்த்திபனூா் நோக்கி சரக்குகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. பாா்த்திபனூா் அருகே தென்றல் நகா் கீழ் பாலத்தில் வரும்போது முன்னால் சென்ற டிப்பா் லாரி மீது, அந்த சரக்கு ஏற்றிக்கொண்டு வந்த லாரி மோதியது.
இதில், லாரியில் உதவியாளராகப் பணியாற்றிய, கடலாடி அருகே மாரந்தை கிராமத்தைச் சோ்ந்த பூமிநாதன் (49) பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
இதுகுறித்து பாா்த்திபனூா் போலீஸாா், டிப்பா் லாரி ஓட்டுநா் கபில்தேவ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.