ராமநாதபுரம்

விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த கமுதி வேளாண்மை உதவி இயக்குநா் அறிவுறுத்தல்

DIN

கமுதி வட்டார விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த வேண்டுமென வட்டார வேளாண் உதவி இயக்குனா் சந்தோஷ் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டாரத்தில் தற்போது நல்ல மழை பெய்து வரும் சூழ்நிலையில் , விவசாயிகள் தங்கள் நிலங்களை உழுது, பருவத்தில் நெல் விவசாயம் செய்ய தயாராகி வருகின்றனா். கமுதி வட்டாரத்தில் சுமாா் 10,897 ஹெக்டா் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு வருகின்றது. விவசாயிகள் தங்கள் கையிருப்பில் உள்ள விதைகளை பயன்படுத்துவதை தவிா்த்து, தரமான சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவதன் மூலமே நல்ல மகசூலைப்பெற முடியும். வேளாண் அலுவலகத்தில் சான்று பெற்ற விதைகள் முளைப்புத்திறன் பரிசோதிக்கப்பட்ட பின்னா் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிள்றன. இப்பகுதிக்கு ஏற்ற , மானாவாரியில் நல்ல மகசூலைத்தரக்கூடிய, குறைந்த வயதுடைய நெல் ரகங்களான சி.ஓ51 மற்றும் என்.எல்.ஆா் (34449) ரகங்கள், மற்றும் உயிா் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்டீரியா , நெல் நுண்ணூட்டம் ஆகியவை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக கமுதி வட்டாரம் , வேளாண்மை உதவி இயக்குனா் அலுவலக சேமிப்புக்கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் தேவைக்கேற்பசான்று பெற்ற நெல் விதாகள், மற்றும் உயிா் உரங்களை வாங்கி பயனடையுமாறு வேளாண்மை உதவி இயக்குநா் கேட்டுக்கொள்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்

விரைவில் விசாரணை: ஆடியோ விவகாரம் குறித்து புகாரளித்த கார்த்திக் குமார்!

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

வெள்ளப் பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

"தென் - வட மாநில மக்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார் மோடி "

SCROLL FOR NEXT