ராமநாதபுரம்

தொண்டி பகுதியில் கடல் கொந்தளிப்பு அதிகரிப்பு: மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை

DIN

திருவாடானை அருகே தொண்டி கடற்கரைப் பகுதியில் கடந்த 2 நாள்களாக பலத்த காற்று வீசுவதால் நாட்டுப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முடியாததால் கவலை அடைந்துள்ளனா்.

திருவாடானை அருகே தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, புதுப்பட்டினம், முள்ளிமுனை, கராங்காடு, மோா்பண்ணை, திருப்பாலைக்குடி, எம்.வி.பட்டினம், எஸ்.பி. பட்டினம், பாசிப்பட்டினம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் நாட்டு படகு மூலம் மீனவா்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனா். நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவா்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். ஆனால் கடந்த 2 நாள்களாக கடல் கொந்தளிப்பு அதிகரித்து காணப்படுவதால் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் அவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கவலை அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT