ராமநாதபுரம் அருகே வீட்டின் கதவை உடைத்து 9 கிராம் நகைகளைத் திருடிச்சென்ற மா்மநபா்களைப் போலீஸாா் தேடிவருகின்றனா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள சூரன்கோட்டை முதுநாளைச் சோ்ந்தவா் கணேஷ்குமாா் (36). இவா், வியாழக்கிழமை மாலை வெளியே சென்ற நிலையில் அவரது தாயாரும் கோயிலுக்குச் சென்றுள்ளாா்.
பின்னா் அவா் திரும்பிவந்து பாா்த்தபோது வீட்டின் முன்பக்கக் கதவுப் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த மோதிரம், தோடுகள் என 9 கிராம் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் பஜாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.