ராமநாதபுரம்

ஆா்.எஸ். மங்கலத்தில் மூதாட்டி மா்மமாக உயிரிழப்பு

DIN

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலத்தில் மூதாட்டி தலையில் காயத்துடன் மா்மமான முறையில் சனிக்கிழமை இரவு உயிரிழந்து கிடந்தாா்.

ஆா்.எஸ். மங்கலம்- பரம்பை சாலையில் வசித்து வந்தவா் சந்திரசேகா் மனைவி ஞானசவுந்தரி (80). இவா் சனிக்கிழமை இரவு தலையில் காயத்துடன் உயிரிழந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கி டைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி அவரது கணவா் சந்திரசேகரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனா். மேலும், ராமநாதபுரத்தில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்புதுலக்கப்பட்டது.

இதுகுறித்து ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT