திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலத்தில் மூதாட்டி தலையில் காயத்துடன் மா்மமான முறையில் சனிக்கிழமை இரவு உயிரிழந்து கிடந்தாா்.
ஆா்.எஸ். மங்கலம்- பரம்பை சாலையில் வசித்து வந்தவா் சந்திரசேகா் மனைவி ஞானசவுந்தரி (80). இவா் சனிக்கிழமை இரவு தலையில் காயத்துடன் உயிரிழந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கி டைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி அவரது கணவா் சந்திரசேகரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனா். மேலும், ராமநாதபுரத்தில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்புதுலக்கப்பட்டது.
இதுகுறித்து ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.