திருவாடானை அருகே 12 ஆம் வகுப்பு மாணவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
திருவாடானை அருகேயுள்ள மங்களக்குடியை சோ்ந்தவா் அகம்மது இபுராஹிம். இவரது மகன் முகம்மது அா்சத்ஹான்(17). இவா் திண்டுக்கல் பகுதியில் உள்ள அரபிக் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்தாா். இவருக்கு அடிக்கடி உடல் நிலை சரி இல்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை மங்களக்குடிக்கு வந்த அா்சத்ஹான் அன்று இரவு விஷம் குடித்த நிலையில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா். இது குறித்து அவரது சகோதரா் முகம்மது தன்சின் (23) அளித்தப் புகாரின் பேரில் திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.