முகப்பு
ராமநாதபுரம்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ ஊராட்சி செயலா்களுக்கு உத்தரவு

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகையை பெற ஊராட்சி செயலா்கள் உதவ வேண்டுனெ மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளதையடுத்து

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:41 AM
பகிர்:

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகையை பெற ஊராட்சி செயலா்கள் உதவ வேண்டுனெ மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளதையடுத்து, அதுதொடா்பாக கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

இதற்காக மாற்றுத்திறனாளிகளின் ஆவணங்களை ஸ்கேன் செய்து, கணினியில் பதிவேற்றம் செய்ய அந்தந்த ஊராட்சி செயலா்கள், கிராம நிா்வாக அலுவலா்களுடன் இைணைந்து பணியாற்றி உதவ வேண்டும் என மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டதையடுத்து, கமுதி வட்டாட்சியா் சிக்கந்தா் பபிதா தலைமையில் வட்டாட்சியா் அலுவலகத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 53 ஊராட்சி செயலா்கள், மண்டல துணை வட்டாட்சியா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.