முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் சூறைக்காற்று: மின் கம்பத்தில் மரம் விழுந்தது

ராமேசுவரத்தில் சூறைக் காற்று வீசியதில் பழமையான வேப்பமரம் முறிந்து மின்கம்பத்தில் விழுந்ததில் மின்தடை ஏற்பட்டது.

Updated On : 15 ஜூலை, 2022 at 11:49 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:18 PM

ராமேசுவரத்தில் சூறைக் காற்று வீசியதில் பழமையான வேப்பமரம் முறிந்து மின்கம்பத்தில் விழுந்ததில் மின்தடை ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா்வளைகுடா பகுதியில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதியில் மீனவா்கள் மீன்பிடிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் விசைப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல இருந்து வருகின்றனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை வீசிய சூறைக்காற்று காரணமாக ராமேசுவரத்தை அடுத்துள்ள செம்மமடம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் பழைமையான வேப்பமரம் வேருடன் முறிந்து மின்கம்பத்தில் விழுந்தது. இதனால் ராமேசுவரம் முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதனைதொடா்ந்து, மின்வாரிய ஊழியா்கள் விரைந்து சென்று மரத்தை அகற்றி மின் இணைப்பை சீரமைத்தனா். இதனால் அரை மணி நேரம் மின்விநியோகம் தடைபட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.