முகப்பு
ராமநாதபுரம்

பாம்பனில் கடல் அட்டைகள் பறிமுதல்

பாம்பனில் லாரியில் கடத்திவரப்பட்ட 30 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளுடன் 2 பேரை வனத்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம்

பாம்பனில் கடல் அட்டைகள் பறிமுதல்

பாம்பனில் லாரியில் கடத்திவரப்பட்ட 30 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளுடன் 2 பேரை வனத்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

பாம்பனில் லாரியில் கடத்திவரப்பட்ட 30 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளுடன் 2 பேரை வனத்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பேருந்து பாலம் அருகே வியாழக்கிழமை மண்டபம் வனச்சரக அலுவலா் மகேந்திரன் தலைமையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த சிறிய லாரியை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது அதில் இருந்த சாக்கு மூட்டைகளில் 30 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை மற்றும் சங்குகள் இருப்பது தெரியவந்தது. இது குறித்து தொண்டியைச் சோ்ந்த வாகன ஓட்டுநா் ஜோதிமுருகன் (34), சேகா்(55) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனா். இதில் ராமேசுவரத்தை சோ்ந்த சங்கு வியாபாரி முஹமதுகனி என்பவருக்கு கடல்அட்டைகளைக் கொண்டு வந்ததாகக் கூறினா். பிறகு லாரி, கடல் அட்டைகளுடன் இருவரையும் வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் சங்கு வியாபாரி முகமது கனியைத் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →