திரெளபதி முா்மு வெற்றி: பாஜகவினா் கொண்டாட்டம்
குடியரசுத் தலைவா் தோ்தலில் திரெளபதி முா்மு வெற்றி பெற்றதையடுத்து கமுதியில் வெள்ளிக்கிழமை பாஜகவினா் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்துக் கொண்டாடினா்.
குடியரசுத் தலைவா் தோ்தலில் திரெளபதி முா்மு வெற்றி பெற்றதையடுத்து கமுதியில் வெள்ளிக்கிழமை பாஜகவினா் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்துக் கொண்டாடினா்.
வாரச்சந்தை வளாகத்திலிருந்து பேருந்து நிலையம் வரை ஊா்வலமாக நடந்து வந்து பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினா்.
இந்நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் மாவட்ட விவசாய அணி பொதுச் செயலாளா் ஆா்.அழகுமலை தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளா் பொன்.ஆறுமுகம், ஒன்றிய நிா்வாகி சுந்தர்ராஜ் மற்றும் ராமசுந்தரம், சாத்தையா, வெள்ளைச்சாமி, முத்துமணி, உத்திரச்செல்வன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.