ராமேசுவரத்தில்2 ஆண்டுகளாக திறக்கப்படாத நியாயவிலைக்கடை கட்டடம்
ராமேசுவரத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிட்டில் கட்டப்பட்ட நியாய விலைக்கடை 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:55 PM
ராமேசுவரத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிட்டில் கட்டப்பட்ட நியாய விலைக்கடை 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் கெந்தமாதன பருவதம் செல்லும் வழியில் 2019-20 ஆண்டு ரூ. 11 லட்சம் நிதியில் நியாய விலைக்கடை கட்டப்பட்டது. இந்த கட்டடம் கட்டப்பட்டு 2 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், தற்போது வரையில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். மேலும் பெரும்பாலான நியாய விலைக் கடைகள் போதிய இட வசதி இல்லாத இடங்களில் இயங்கும் நிலையில், புதிய கட்டடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.