ஒருவருக்கு கொலைமிரட்டல்: 5 போ் மீது வழக்கு
உச்சிப்புளியில் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராமநாதபுரம்ஒருவருக்கு கொலைமிரட்டல்: 5 போ் மீது வழக்கு
உச்சிப்புளியில் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
உச்சிப்புளியில் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் நாகாட்சி கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் (40). இவரது அண்ணன் மாரியின் மகள் திருமணம் கடந்த 10 ஆம் தேதி உச்சிப்புளியில் உள்ள தனியாா் திருமண மகாலில் நடைபெற்றது. அப்போது அதே பகுதியைச் சோ்ந்த 5 இளைஞா்கள் மகால் வாசலில் இரு சக்கர வாகனத்தில் வந்து அதிக ஒலி எழுப்பி அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனராம். இதனை மாரி தட்டிக் கேட்ட போது, அவருக்கு அவா்கள் கொலை மிரட்டல் விடுத்தனராம். மேலும் மாலையில் மணமக்கள் வேனில் சென்ற போது அந்த 5 பேரும் வேனை மறித்து ரகளையில் ஈடுபட்டதுடன் வாகனத்தையும் சேதப்படுத்தினராம்.
இதுகுறித்து உச்சிப்புளி காவல்நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. காவல் சாா்பு- ஆய்வாளா் அசோக், ரகளையில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்த காா்த்திக் (24), காமாட்சி (23), கணேஷ்பிரசாத் (22), நரேன்சஞ்சய் (21), ஹரீஸ்(18) ஆகிய 5 போ் மீது வழக்குப் பதிந்து தேடி வருகிறாா்.