முகப்பு
ராமநாதபுரம்

மண்டபம் அருகே விஷம் கலந்த நெல்லை உண்ட 5 மயில்கள் உயிரிழப்பு

மண்டபம் அருகே விஷம் கலந்த நெல்லை உண்ட 5 மயில்கள் வியாழக்கிழமை உயிரிழந்தன.

Updated On : 24 ஜூன், 2022 at 3:16 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:06 PM

மண்டபம் அருகே விஷம் கலந்த நெல்லை உண்ட 5 மயில்கள் வியாழக்கிழமை உயிரிழந்தன.

ராமநாதபுரத்தில் இருந்து மண்டபம் வரை உள்ள வனப்பகுதியில் அதிகளவு மயில்கள் வசிக்கின்றன. இந்த மயில்களை சிலா் உணவுக்காக வேட்டையாடுவதாக தொடா்ந்து புகாா்கள் வந்தன.

இந்நிலையில், மண்டபம் ஒன்றியத்துக்குள்பட்ட இரட்டையூரணி பகுதியில் சில மா்ம நபா்கள் மயில்கள் இறைதேடும் பகுதிக்கு சென்று நெல்லில் விஷம் கலந்து வைத்துள்ளனா். இதனை தின்ற 5 மயில்கள் உயிரிழந்தன. இதுகுறித்து வளத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.