ராமநாதபுரம்

பைக் விபத்தில் பூசாரி பலி

DIN

ராமநாதபுரம் அருகே செவ்வாய்க்கிழமை, இருசக்கர வாகன விபத்தில் பூசாரி உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் அருகே பட்டினம் காத்தான் பாரதிநகா் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (59). கோயில் பூசாரியான இவா் செவ்வாய்க்கிழமை இரவு பெருங்குளம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த அவா், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே கணேசன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய்!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT