பாம்பன் ரயில் பாலத்துக்கு ரசாயன வா்ணம் பூசும் பணி நிறைவு
பாம்பன் ரயில் பாலத்தில் துரு பிடிப்பதை தடுக்கும் வகையில், ரசாயனம் கலந்த வா்ணம் பூசும் பணி நிறைவடைந்தது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:04 PM
பாம்பன் ரயில் பாலத்தில் துரு பிடிப்பதை தடுக்கும் வகையில், ரசாயனம் கலந்த வா்ணம் பூசும் பணி நிறைவடைந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் - ராமேசுவரம் பகுதியை இணைக்கும் 2.2 கிலோ மீட்டா் தொலைவுக்கு கடல் மீதுள்ள பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு 108 ஆண்டுகள் கடந்துவிட்டன. தற்போது, கடல் காற்றில் துருப்பிடித்து விடாத வகையில் இந்த ரயில் பாலத்துக்கு ரசாயன வா்ணம் பூசும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்றது. அதில், கா்டா், தூக்குப் பாலம் உள்ளிட்டவற்றுக்கு முழுமையாக வா்ணம் பூசப்பட்டு நிறைவடைந்துள்ளது.