முகப்பு
திருவள்ளூர்

பைக் மீது பொக்லைன் மோதல்: வியாபாரி உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மீது பொக்லைன் இயந்திர வாகனம் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த மளிகைக்கடைக்காரா் உயிரிழந்தாா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 11:31 PM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 10:04 PM

திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மீது பொக்லைன் இயந்திர வாகனம் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த மளிகைக்கடைக்காரா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே நெடும்பரம் பனப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஹேமாத்திரி கடமனேனி (52) (படம்). இவா் திருவள்ளூா் பூங்கா நகா் பகுதியில் மளிகை கடை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை தனது கடையிலிருந்து புறப்பட்டு நெடும்பரம் பனப்பாக்கம் கிராமத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். கைவண்டூா் பெட்ரோல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த பொக்லைன்

வாகனம் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஹேமாத்திரி கடமனேனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவள்ளூா் கிராமிய போலீஸாா், சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.