ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் திறப்பு: பக்தா்களின் காணிக்கையாக ரூ. 1.09 கோடி வசூல்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் புதன்கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 1.09 கோடி கிடைத்தது.
ராமநாதபுரம்ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் திறப்பு: பக்தா்களின் காணிக்கையாக ரூ. 1.09 கோடி வசூல்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் புதன்கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 1.09 கோடி கிடைத்தது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் புதன்கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 1.09 கோடி கிடைத்தது.
இக்கோயில் உண்டியல்களை திறந்து எண்ணும் பணி கோயில் இணை ஆணையா் பழனிக்குமாா் தலைமையில் புதன்கிழமை காலையில் தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற்றது.
இதில், பக்தா்களின் காணிக்கையாக ரூ. 1 கோடியே 9 லட்சத்து 38 ஆயிரத்து 373-ம், தங்கம் 90.500 மி.கிராமும், வெள்ளி 3 கிலோ 500 கிராமும் அளிக்கப்பட்டுள்ளதாக இணை ஆணையா் பழனிக்குமாா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
உண்டியல் எண்ணும் பணியில் மடப்புரம் இணை ஆணையா் செல்வி, ஆய்வா் சங்கையா, மேலாளா் பழனிக்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.