ரமலான் பண்டிகை: தொண்டியில் 2000-க்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகையில் பங்கேற்பு
இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் முக்கியமான பண்டிகையான ரமலான் பண்டிகை செவ்வாய்கிழமை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
திருவாடானை: இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் முக்கியமான பண்டிகையான ரமலான் பண்டிகை செவ்வாய்கிழமை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தொண்டி, நம்புதாளை, எஸ். பி.பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தர்காவில் சிறப்பு தொழுகையில், சில பகுதிகளில் பொது இடங்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இதில் இஸ்லாமியர்கள் கலந்துகொள்ள குவிந்தனர். 30 நாள்கள் விரதம் இருந்து ரமலான் பண்டிகைக்காக உண்ணா நோன்பை கடைபிடித்த இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையை முடித்த பிறகு உண்ணா நோன்பை கைவிட்டனர்.
Advertisement
Advertisement
பின்னர் ஒருவருக்கொருவர் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்து அன்பை பரிமாறிக் கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.