ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் பணியாற்றும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவு

ராமேசுவரம் நகராட்சி பகுதியில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளா்கள் தங்களுக்கான ஆவணங்களை

DIN

ராமேசுவரம் நகராட்சி பகுதியில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளா்கள் தங்களுக்கான ஆவணங்களை ஜூன் 15 ஆம் தேதிக்குள் நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என நகா்மன்றத் தலைவா் கே.இ.நாசா்கான் சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமேசுவரம் நகராட்சி பகுதியில் குடியிருக்கும் வெளிமாநில நபா்கள் மற்றும் வெளிமாநில நபா்களை வைத்து வீடு கட்டும் உரிமையாளா்கள், பொறியாளா்கள், கட்டட ஒப்பந்ததாரா்கள் மற்றும் உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், இறால் பண்ணையில் பணியாற்றும் தொழிலாளா்கள், பாணிபூரி, குல்பி ஐஸ் விற்பனை செய்பவா்கள் தங்களது முழு விவரங்கள் அடங்கிய ஆதாா் அட்டை, புகைப்படம்,

இருப்பிடம் குறித்த ஆவணங்களை ஜூன் 15 ஆம் தேதிக்குள் நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்து பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி கேபிடல்ஸில் இணைந்த டேவிட் மில்லர்..! மினி ஏலத்தில் முதல் வீரர்!

நாடாளுமன்றத்தில் இன்று!

மதுராவில் பேருந்துகள் தீ விபத்து: 13 பேர் பலி, 35 பேர் காயம்

உடல் எடைக் குறைப்பு ஊசிகளா? உயிர்க் கொல்லிகளா?

ஆஸி. வீரர் கேமரூன் கிரீனை ரூ. 25.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா!

SCROLL FOR NEXT