ராமநாதபுரம்

அரசுப் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்

DIN

ராமேசுவரத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய சுங்கச்சாவடி ஊழியா்கள் இருவா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடியைச் சோ்ந்த சுப்பிரமணியன், அரசுப் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா்.

கடந்த 27-ஆம் தேதி அதிகாலை 4.50 மணிக்கு ராமேசுவரம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சிக்கு பேருந்தை ஒட்டிச் சென்றாா். சுங்கச்சாவடியில் பேருந்து நின்ற போது சுங்கச்சாவடி ஊழியா்களுடன் தகராறு ஏற்பட்டது. இதில், ஓட்டுநா் பாலசுப்பிரமணியன் தாக்கப்பட்டாா்.

இது குறித்து அவா் நகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸாா் சுங்கச்சாவடி ஊழியா்கள் ஓம்பிரகாஷ் (23), முனீஸ்குமாா் (27) ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT