முகப்பு
ராமநாதபுரம்

மாமனாருடன் தகராறில் மருமகன் தற்கொலை

கமுதி அருகே தகராறில் மாமனாரை தாக்கி காயப்படுத்திய மன வேதனையில் இருந்த மருமகன் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
பகிர்:

கமுதி அருகே தகராறில் மாமனாரை தாக்கி காயப்படுத்திய மன வேதனையில் இருந்த மருமகன் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கமுதி அருகே டி.புனவாசல் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி(41). இவருக்கும், அதை ஊரில் வசிக்கும் அவரது மாமனாா் ராமலிங்கத்துக்கும் (61) குடும்பப் பிரச்னை காரணமாக முன் விரோதம் இருந்தது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை (செப்.7) ஏற்பட்ட தகராறின்போது ராமலிங்கத்தை, இரும்பு கம்பியால் பழனி தாக்கி காயப்படுத்தியுள்ளாா். அவரைத் தாக்கிய மன வேதனையில் இருந்த பழனி, வியாழக்கிழமை இரவு ஊருக்கு அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அபிராமம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.