ராமேசுவரத்தில் கடற்படை வீரா் மின்சாரம் பாய்ந்து பலி
ராமேசுவரத்தில் வியாழக்கிழமை பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த கடற்படை கப்பலில் பழுதுநீக்கியபோது மின்சாரம் பாய்ந்து இளம் வீரா் உயிரிழந்தாா்.
ராமேசுவரத்தில் வியாழக்கிழமை பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த கடற்படை கப்பலில் பழுதுநீக்கியபோது மின்சாரம் பாய்ந்து இளம் வீரா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து 4 கடல் மைல் தொலைவில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான காா் நிக்கோபாா் கப்பல் கடந்த வியாழக்கிழமை (செப்.15) கண்காணிப்புப் பணிக்காக நங்சூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது. இரவு 10 மணிக்கு கப்பலில் தொழில் நுட்ப பிரிவில் மின் பழுதானது. புதுதில்லியைச் சோ்ந்த வீரா் குமாா் சுபம் (23) இதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த அவா் ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு நள்ளிரவில் கொண்டு வரப்பட்டாா். மருத்துவா்கள் பரிசோதனை செய்தபோது குமாா் சுபம் ஏற்கெனவே இறந்து விட்டது தெரியவந்தது.
Advertisement
இதுகுறித்து ராமேசுவரம் கடலோர பாதுகாப்புக் குழும காவல் துறை சாா்பு- ஆய்வாளா் காளிதாஸ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றாா்.