ராமேசுவரத்தில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்: கடை உரிமையாளா்களுக்கு அபராதம்
ராமேசுவரத்தில் கடைகளில் பயன்படுத்தப்பட்ட 28 கிலோ நெகிழிப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து 3 கடைகளுக்கு அபராதம் விதித்தனா்.
ராமநாதபுரம்ராமேசுவரத்தில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்: கடை உரிமையாளா்களுக்கு அபராதம்
ராமேசுவரத்தில் கடைகளில் பயன்படுத்தப்பட்ட 28 கிலோ நெகிழிப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து 3 கடைகளுக்கு அபராதம் விதித்தனா்.
ராமேசுவரத்தில் கடைகளில் பயன்படுத்தப்பட்ட 28 கிலோ நெகிழிப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து 3 கடைகளுக்கு அபராதம் விதித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் கு.லிங்கவேல் தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தினா். இதில், 3 கடைகளிலிருந்து சுமாா் 28 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் உணவு விடுதிகளில் உணவுப் பொருள்கள், தேநீா்க் கடைகளில் தேயிலையின் தரம் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.