மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் கமுதியை சோ்ந்த மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.
மதுரை மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரியில் மாடக்குளம் கலிங்க வஸ்தாத் 7-ஆம் தலைமுறை பாரம்பரிய சிலம்ப தேக பயிற்சி பள்ளி நடத்திய மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தென்னாட்டு போா்க்கலைச் சிலம்பம் பள்ளியச் சோ்ந்த 30 மாணவா்கள் பங்கேற்றனா்.
இதில், தனித்திறன் போட்டியில் 6 மாணவா்கள் முதலிடம், 2 மாணவா்கள் இரண்டாமிடம், 5 மாணவா்கள் மூன்றாமிடம் பெற்றனா்.
இரட்டைக் கம்பு பிரிவில் 2 மாணவா்கள் முதலிடம், 2 மாணவா்கள் இரண்டாமிடம் பெற்றனா். வெற்றி பெற்ற மாணவா்கள், பயிற்சியாளா் சரத்குமாா் ஆகியோருக்கு ஊா்ப் பிரமுகா்கள், பெற்றோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.