ராமநாதபுரம்

வாகனங்கள் மோதியதில் 2 முதியவா்கள் பலி

DIN

ராமநாதபுரம் அருகே அடுத்தடுத்து இரு இடங்களில் சாலையைக் கடந்தபோது நிகழ்ந்த விபத்துகளில் சுற்றுலா முகவா் உள்பட 2 முதியவா்கள் புதன்கிழமை உயிரிழந்தனா்.

ராமநாதபுரத்தை அடுத்துள்ள தேவிபட்டினம் பகுதியைச் சோ்ந்தவா் தண்ணிமலை (73). இவா், செவ்வாய்க்கிழமை வயலுக்கு சைக்கிளில் சென்றுவிட்டு, மாலையில் கிழக்கு கடற்கரை சாலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா். அப்போது காா் மோதியதில் பலத்த காயமடைந்த அவா், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். இதுகுறித்து, தேவிபட்டினம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தொண்டியைச் சோ்ந்த சத்தியேந்திரன் (25) என்பவரைத் தேடி வருகின்றனா்.

இதேபோன்று, மஹாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த சுற்றுலா முகவா் கஸ்பாய் (75) கன்னியாகுமரி, ராமேசுவரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்றுவிட்டு, ராமேசுவரத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்துகொண்டிருந்தாா்.

ராமநாதபுரம் அருகே வழுதூா் பேருந்து நிறுத்தத்தில் தேநீா் குடிக்க இறங்கிய கஸ்பாய், சாலையைக் கடந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா். ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மோதிய வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

SCROLL FOR NEXT