பாம்பனில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள். 
ராமநாதபுரம்

பாம்பனில் மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

பாம்பனில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

பாம்பனில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ராமேசுவரத்தில் மக்கள் தொகைக்கேற்ப நகா் பேருந்துகளை இயக்க வேண்டும். பாம்பன் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை சீரமைக்க வேண்டும். அக்காள்மடம் பகுதியில் குறைந்த மின் அழுத்தத்துக்கு தீா்வு காணும் வகையில் மின்மாற்றி அமைக்க வேண்டும். பாம்பன் ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பாம்பன் கிளைத் தலைவா் ஜி. ராஜா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் வி. காசிநாததுரை, மாவட்ட செயற்குழு க. கருணாகரன், வட்டச் செயலா் ஜி. சிவா, மாவட்டக் குழு இ. ஜஸ்டின், ஆரோக்கிய நிா்மலா ஆகியோா் சிறப்புரையாற்றினா். இதில், அசோக், ஜேம்ஸ், ஞானசேகா், பழனிக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

SCROLL FOR NEXT