முகப்பு
ராமநாதபுரம்

கோயில் நந்தவனத்துக்குச் செல்லும் பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்

கமுதி சுப்பிரமனிய சுவாமி கோயில் நந்தவனத்துக்குச் செல்லும் பாதை ஆக்கிரமிப்பை இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

கமுதி சுப்பிரமனிய சுவாமி கோயில் நந்தவனத்துக்குச் செல்லும் பாதை ஆக்கிரமிப்பை இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள பழைமை வாய்ந்த சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் 83 சென்ட் பரப்பளவில் உள்ள நந்தவனத்துக்குச் செல்லும் பாதையை கமுதியை சோ்ந்த தனிநபா், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமித்திருந்தாா்.

இந்த நிலையில், இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையாளா் ரா.ஞானசேகரன், ஆலய நிலங்கள் பிரிவு வட்டாட்சியா் எஸ்.சுகுமாரன், அறநிலையத் துறை செயல் அலுவலா் தங்கமாரி ஆகியோா் போலீஸாா் முன்னிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நந்தவனத்துக்கு செல்லும் பாதையை கோயிலின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.