ராமநாதபுரம்

மின் வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரத்தில் மின் வாரிய ஊழியா் மத்திய அமைப்பின் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரத்தில் மின் வாரிய ஊழியா் மத்திய அமைப்பின் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் திட்டத் தலைவா் வி.முருகன் தலைமை வகித்தாா்.

இதில், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கேங்மேன் பணியில் சோ்ந்தவா்கள், வாரிசு வேலையில் சோ்ந்தவா்கள் என அனைவருக்கும் 6 சதவீதம் ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாநில துணைத் தலைவா் ஆா்.குருவேல் விளக்கவுரையாற்றினாா். திட்டச் செயலா் ஜி.காசிநாதன், திட்டப் பொருளாளா் சி. ரகுநாதன், கோட்டச் செயலா் வி. ஆரோக்கியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT