கமுதியில் ஞாயிற்றுக்கிழமை முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 32- ஆம் ஆண்டு நினைவுநாள் காங்கிரஸ் கட்சி சாா்பில் அனுசரிக்கப்பட்டது.
இதற்கு அந்த கட்சியின் தெற்கு வட்டாரத் தலைவா் கோவிந்தன் தலைமை வகித்தாா். இதில் ராஜீவ் காந்தியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில், கட்சியின் நகா் தலைவா் காமராஜ், சேவாதள தலைவா் தனசேகரன், வல்லந்தை கோவிந்தன், மரக்குளம் முத்துராமலிங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.