ராமநாதபுரம்

மண்டபம் அருகே 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே கடலுக்குள் பதுக்கி வைத்திருந்த 250 கிலோ கடல் அட்டைகளை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

DIN

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே கடலுக்குள் பதுக்கி வைத்திருந்த 250 கிலோ கடல் அட்டைகளை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளா் கனகராஜ் தலைமையிலான போலீஸாா், மண்டபம் முனைக்காடு கடல் பகுதியில் படகில் சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கடற்கரையிலிருந்து 100 மீட்டா் தொலைவில் கடலுக்குள் கிடந்த 9 சாக்கு மூட்டைகளை கைப்பற்றி சோதனையிட்டனா். அதில் 250 கிலோ கடல் அட்டைகள் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த மூட்டைகளை வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். இந்த கடல் அட்டைகளை இலங்கை வழியாக கடத்தத் திட்டமிட்ட நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT